24 665fcb9c81ecf
இந்தியாசெய்திகள்

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி : மம்தா பானர்ஜி கர்ஜனை

Share

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி : மம்தா பானர்ஜி கர்ஜனை

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi ) ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார், அவர் பதவி விலகல் செய்ய வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி மேலும் தெரிவிக்கையில்,

பா.ஜ.கவுக்கு இத்தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ரீதியாக பா.ஜ.கவை திரிணமுல் காங்கிரஸ் வென்றுள்ளது.

சந்தேஷ்காலி விவகாரத்தில் பலமுறை பொய் சொல்லியே வந்தது பா.ஜ.க. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் பிரதமர் மோடி. அவர் தனது பதவியை பதவி விலகல் செய்ய வேண்டும்.

மோடியால் இனி ‛இண்டியா’ கூட்டணியை உடைக்க முடியாது. உத்தவ், சரத்பவார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளேன். இத்தேர்தலில் கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...