24 665fcb9c81ecf
இந்தியாசெய்திகள்

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி : மம்தா பானர்ஜி கர்ஜனை

Share

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி : மம்தா பானர்ஜி கர்ஜனை

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi ) ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார், அவர் பதவி விலகல் செய்ய வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி மேலும் தெரிவிக்கையில்,

பா.ஜ.கவுக்கு இத்தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ரீதியாக பா.ஜ.கவை திரிணமுல் காங்கிரஸ் வென்றுள்ளது.

சந்தேஷ்காலி விவகாரத்தில் பலமுறை பொய் சொல்லியே வந்தது பா.ஜ.க. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் பிரதமர் மோடி. அவர் தனது பதவியை பதவி விலகல் செய்ய வேண்டும்.

மோடியால் இனி ‛இண்டியா’ கூட்டணியை உடைக்க முடியாது. உத்தவ், சரத்பவார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளேன். இத்தேர்தலில் கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...