24 66095a5e368ce
இந்தியாசெய்திகள்

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

Share

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை, அது தேவையில்லை. ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்தவர் இங்கு வரவில்லை என்று தான் மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நான் எப்போதும் இந்த தொகுதியில் தான் இருப்பேன். டாஸ்மாக், போதைப் பழக்கம் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை ஒழிக்க வேண்டும்.

இந்தியாவிற்கு மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும். உங்கள் வாக்குகளை எனக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள். கடந்த ஆண்டுகளில் பாஜக ஆட்சி ஊழல் செய்யாமல் உள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...