24 66019a5fc3fb3
இந்தியாசெய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மீது சத்தியம் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

Share

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மீது சத்தியம் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

தமிழக சட்டசபை தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது சத்தியம் செய்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் வேட்பாளராக கார்த்திகா போட்டியிடுகிறார்.

கோவை சேர்ந்த பி.ஈ பட்டதாரியான இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை தேர்தல் பரப்புரையாளராக உள்ளார்.

இவர் இன்று நாகப்பட்டினம் மக்களவை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்த்துள்ளார்.

அப்போது, ”தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது ஆணையாக எனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...