இந்தியாசெய்திகள்

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்!

rtjy 41 scaled
Share

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்!

இந்திய – சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 இந்திய இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று (03.09.2023) நள்ளிரவில் ஏற்ப்பட்ட மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இத்திடீர் வெள்ளத்தில் இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பல இந்திய இராணுவ தளங்கள் மற்றும் பல இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் காரணமாக படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...