tamilni 175 scaled
இந்தியாசெய்திகள்

உதயநிதியின் சனாதனம்.. எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம்: அமைச்சர் சர்ச்சை

Share

உதயநிதியின் சனாதனம்.. எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம்: அமைச்சர் சர்ச்சை

சனாதனத்தை எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சர்ச்சையாக பேசியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று பேசியிருந்தார்.

இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “சனாதனத்திற்கு எதிராக பேசுபவர் யாராக இருந்தாலும் நாட்டில் அரசியல் மற்றும் மதிப்பை தக்கவைக்க முடியாது என்றும், சனாதனத்தை ஒழிப்பதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், சனாதனத்தை காப்பாற்றுவதற்கு முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சனாதனத்தை எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று சர்ச்சையாக பேசியுள்ளார். தற்போது, அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...