தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை
இந்தியாசெய்திகள்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை

Share

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, கோயம்புத்தூர், மதுரை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45).

முன்னாள் பாமக செயலாளரான இவர் கடந்த 2019ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவிடைமருதூர் பொலிசார் பலரை கைது செய்தனர், பின்னாளில் இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடந்தது.

இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில், தற்போது சோதனை நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...