rtjy 101 scaled
இந்தியாசெய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

Share

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விலைவாசி உயர்வு மக்களை அச்சுறுத்துவதால் ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தக்காளியின் திடீர் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். அதில் இருந்து மீள்வதற்குள் தற்போது பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமே இந்த விலைவாசி உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதனை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிபோடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...