கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை! ஆரஞ்சு அலர்ட்
இந்தியாசெய்திகள்

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை! ஆரஞ்சு அலர்ட்

Share

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை! ஆரஞ்சு அலர்ட்

இந்திய மாநிலம் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இதுவரை கனமழைக்கு 8 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு அணைகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் கொச்சியில் உள்ள கண்ணாமலியில் கடல் உள்வாங்கியதால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

Share

2 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....