2kbzYqXiFYflWRUk5ZDh 1
செய்திகள்பிராந்தியம்

ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Share

குருணாகல், கல்கமுவ – அம்பன்பொல பகுதியில் நபரொருவர் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் முற்பகல் (08-05-2023) இடம்பெற்றுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரை மாய்ந்துள்ளார்.

இதேவேளை, கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் 16 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் ஒரு கட்டமாக தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் வீட்டிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சோதளை நடவடிக்கைகள் நிறைவடைந்து சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த நபர் ரயில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் பொலிஸாரின் நடவடிக்கை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...