sritharan
செய்திகள்அரசியல்பிராந்தியம்

அரசின் சர்வாதிகாரத்தால் அதளபாதாளத்துக்குள் நாடு! – சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு

Share

“சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ அதிகாரிகளை நியமனம் செய்து தமது அமைச்சுக்களை நடத்தியதன் விளைவால் இந்த நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இன்று நடைபெற்ற மக்களின் கையெழுத்துப் பெறும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று இலங்கை அரசு பல்வேறுபட்ட நெருக்கடிகளை நாட்டில் வாழ்கின்ற மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.

மக்கள் அன்றாட சீவியங்களை நடத்த முடியாதவர்களாக மாறியிருக்கின்றார்கள். எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.

அன்றாட உணவுப்பொருட்கள் மக்களின் வாழ்வில் பெருத்த அடியை அடித்திருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு வாழ முடியுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீராகக் கொண்டு செல்வதற்குச் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி ஒரு நிலைப்பாட்டுக்கு வாருங்கள் எனக் கட்சித் தலைவர்கள், நிபுணர்கள் எனப் பலரும் கோரியிருந்தனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் வாசல்களைத் தொடமாட்டோம், அவர்களுடன் பேசமாட்டோம் என்று தெரிவித்த அரச தரப்பினர் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றார்கள்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....