பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் இன்று பிற்பகல் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல நகர பிரபல தமிழ்ப் பாடசாலையில் கற்கும் 18 வயதுடைய குறித்த மாணவி, பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியிலேயே இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். ஹாலி எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 Comments