வடக்கில் ரயில் மோதி ஒருவர் பலி
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் ரயிலுடன் மோதி இருவர் சாவு!

Share

வடக்கில் இன்று ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழந்தனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம், கோவில் வீதியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அதனை வீதியில் நிறுத்திவிட்டு ரயில் முன் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மாங்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியே விபத்துக்குள்ளாகி மரணமானவராவார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...