ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் மன்றம் ‘நேரத்துக்கு மட்டும் வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அதனால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டதாகவும் மன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விமானக் கடமைகளை அவர்களின் விமான அட்டவணைக்கு அமைய மட்டுமே செய்வார்கள் .
மேலும், அங்கிகரிக்கப்பட்ட வருடாந்த விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் விமானிகள் கடமைகளைச் செய்யமாட்டார்கள் .
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை ஒழுங்காக இயக்குவதற்கு போதுமான விமானிகளை நியமிக்கவில்லை என்றும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
#SrilankaNews
Leave a comment