26092019BurundiWash110 0
செய்திகள்இலங்கை

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!!

Share

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாதவர்களின் நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க,

கடந்த வருடம் முதல் 1200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறி உள்ளதாகவும் ஆறு மாதங்கள் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவையாக உள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

27 லட்சத்தி 50 ஆயிரம் பேருக்கு மாதாந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடி நீரை வழங்குகின்றோம்.

மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2500 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவை கட்டண தொகையை செலுத்தாததனால் டிசம்பர் மாதமளவில் அத்தொகை 7200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாதாந்த நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தகட்ட பட்டியலில் 1.5 சதவீதம் தள்ளுபடியும் பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்தம் 2.5% தாமத கட்டணம் அறவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
செய்திகள்இலங்கை

போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று...

check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக...

1744006431 namal cid 6
செய்திகள்இலங்கை

“திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு அரசுப் பாதுகாப்பில் இடமளிக்க வேண்டாம்”: நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!

அரச பாதுகாப்பில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இடமளிக்க வேண்டாம் என மொட்டுக் கட்சியின் (SLPP)...

25 68fa0ce16e51c
செய்திகள்இலங்கை

“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...