New Project 94
செய்திகள்உலகம்

உக்ரைன் மோதல் – ரஷ்யா அமெரிக்காவுக்கு இடையிலானதா?

Share

உக்ரைனில் ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதலாக மாறியுள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அண்மைய நாட்களாக குவித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.

அதேபோல இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

அப்படி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அயர்லாந்து நாட்டின் கடற்கரைக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கு அயர்லாந்து தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அயர்லாந்துக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பி வருகின்றது.

அங்கு தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேட்டோ பால்டிக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் படைகள் மற்றும் போர் தளவாடங்கள், போர் கப்பல்கள் என்பவற்றினையும் அனுப்பியுள்ளது.

இதேவேளை அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ படையில் உள்ள டென்மார்க் நவீன போர் விமானங்களை சோனியாவுக்கு அனுப்புகின்றது. ஸ்பெயின் நாடு பல்கேரியாவுக்கு போர்க்கப்பல்கள் விமானங்களை அனுப்புகின்றது.

அதேபோல பிரான்ஸ் தனது கூடுதல் படைகளை அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளை விரிவுபடுத்த கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தும் நிலையில் அங்கு நேட்டோவின் கப்பல்கள் விரைந்துள்ளமை சர்வதேச நாடுகள் மத்தியில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

#WorldNews


Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...

image 1000x630 11
செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: 10 பேருக்கு எதிராக இன்று வழக்கு விசாரணை ஆரம்பம் – சுமந்திரன் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,...

image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான்...