as
செய்திகள்இலங்கை

என்னை மீட்டவர்கள் இளைஞர் ,யுவதிகளே!! – சந்திரகாந்தன் பெருமிதம்!!

Share

ஒருசாரார் என்னை அழிக்க நினைத்தார்கள். ஆனால் இளைஞர்,யுவதிகள் என்னை மீட்டு எடுத்தனர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதி ஒன்றுக்கு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய அவர் ,

வடக்கு கிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு எனக்கே கிடைத்தது.

அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அதிகூடிய வாக்கினை அளித்து என்னை சிறையிலிருந்து மீட்டு எடுத்தனர்.

நாங்கள் தற்சமயம் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. நமது கட்சி பொதுஜன பெரமுன உடன் கூட்டு வைத்துள்ளது.அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.

ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா காரணமாக கடுமையான நெருக்கடிகள் மத்தியிலும் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். என்றார்.




Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...