as
செய்திகள்இலங்கை

என்னை மீட்டவர்கள் இளைஞர் ,யுவதிகளே!! – சந்திரகாந்தன் பெருமிதம்!!

Share

ஒருசாரார் என்னை அழிக்க நினைத்தார்கள். ஆனால் இளைஞர்,யுவதிகள் என்னை மீட்டு எடுத்தனர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதி ஒன்றுக்கு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய அவர் ,

வடக்கு கிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு எனக்கே கிடைத்தது.

அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அதிகூடிய வாக்கினை அளித்து என்னை சிறையிலிருந்து மீட்டு எடுத்தனர்.

நாங்கள் தற்சமயம் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. நமது கட்சி பொதுஜன பெரமுன உடன் கூட்டு வைத்துள்ளது.அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.

ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா காரணமாக கடுமையான நெருக்கடிகள் மத்தியிலும் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். என்றார்.




Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...