VideoCapture 20211221 163642
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்ட விரோத படகுகள் அரசுடமையாக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Share

சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசுடமையாக்கப்பட்ட படகுகள் பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளிக்கப்பட்டு அவை மீனவர்களின் பாவனைக்காக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பயன்பாட்டுக்கு உதவாத படகுகள் விற்பனை செய்யப்பட்டு இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்ட அபிவிருத்தி பணிகள் வேறு காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையால் சரியாக திட்டமிடப்படாமல் மீனவர்களுக்கு பிரயோசனமற்று சென்றுள்ளது.

ஆனால் விரைவில் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பிரதேச மீனவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டே இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...