dipper 960x720 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்ணை கடத்திச் சென்ற ரிப்பர் வாகனம் விபத்து!

Share

பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் டிலக்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இளம்பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த ரிப்பர் வாகனத்தில் கரவெட்டித்திடல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாகவும், குறித்த வாகனத்தை குடும்பத்தினர் துரத்தி சென்றபோதே வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...