செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் என்ற ரீதியில் விடுதலைப்புலிகள் குறித்து பெருமைப்பட முடியும் – சரத் பொன்சேகா

Share
D45cTpkU0AISZ02
Share

விடுதலைப் புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் எம்மால் பெருமைப்பட முடியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இராணுவப் பாதுகாப்புக்காக முன்னரை விடவும் 30 மில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்த சூழல் நிலவாத காலத்தில் அதிக தொகை ஒதுக்கீடு சார்ந்து சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

இது அர்த்தமற்ற கேள்வியாகும். யுத்தம் நிலவா விட்டாலும் நாட்டின் இராணுவத்தை பலமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினரால் வெறுமனே 2,500 போராளிகளை கொண்ட விடுதலைப் புலிகளுடன் தாக்குபிடிக்க முடியாது போன வரலாறும் எமக்கு உள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டினார்.

 

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...