Sudanese army has shot dead
செய்திகள்உலகம்

துப்பாக்கியால் 15பேரை சுட்டுக்கொன்ற படையினர் !

Share

துப்பாக்கியால் 15பேரை சூடான் இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது.

சூடானில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 போ் சாவடைந்துள்ளனர் .

இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தில், ஒரே நாளில் இத்தனை அதிகம் போ் சாவடைந்தது இதுவே முதல்முறையாகும்.

சூடானில் இராணுவ ஆட்சியை எதிா்த்து தலைநகா் காா்ட்டூம், சூடான் துறைமுகம், கஸாலா, டோங்கோலா, வாட் மடானி, ஜெனினா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் 15 போ் சாவடைந்ததாக மருத்துவா்கள் சங்கம் தெரிவித்தது.

சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்.

அதன்பிறகு இராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அந்த அரசை இராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சூடானில் பதற்றநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

108102459 1739483567122 gettyimages 2198732862 AFP 36XU2T7
செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம்: “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது நல்ல விடயம்” – மோடிக்கு ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், அடுத்த...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...