Australia
செய்திகள்உலகம்

மகிழ்ச்சியில் அகதிகள்- விசா வழங்கியது அவுஸ்திரேலியா

Share

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் கடந்த 8 ஆண்டுளுக்கு மேலாக சிறைவாசம் இருந்த 4 அகதிகளுக்கு இணைப்பு விசாக்களை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.

இதன் காரணமாக , இந்த 4 அகதிகளும் அவுஸ்திரேலியாவில் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளை , இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

விசா கிடைத்த ஆப்கானிய அகதி அகமது ஜஹிர் அசிசி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தான் இனி கைதி கிடையாது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .

மேலும் தெரிவித்த அவர் “நான் விடுதலை ஆகிவிட்டேன். 8 ஆண்டுகளாக சிறையில் கிடந்த நான், இன்று விடுதலை ஆகிவிட்டேன் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்,’ என ஆப்கானிய அகதி அசிசி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவுஸ்திரேலியாவில் இன்னு பல அகதிகள் உள்ளதாகவும் அவர்களுக்கும் விசா கிடைத்தால் அவர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் எனவும் அவுஸ்திரேலியா அரசுக்கு நான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...

8 15
இலங்கைசெய்திகள்

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது...