lions covid
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் சிங்கங்களுக்கு கொரோனா!

Share

சிங்கப்பூரில் 4 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா தெற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

523 பேர் சாவடைந்துள்ளனர் .

கொரோனா வைரஸ் மனிதனை மட்டுமல்ல மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா துரு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 9 ஆசிய வகை சிங்கங்களும், 5 ஆப்பிரிக்க வகை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றை திறந்தவெளியில் விட்டு இருந்தார்கள்.

மக்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று இவற்றை பார்வையிடவும் முடியும் .

அதில் ஆசிய வகை சிங்கங்கள் சில சோர்வாக காணப்பட்டன.

சளி பிடித்து தும்மியபடியும் இருந்தன.

எனவே சிங்கங்களுக்கு சோதனை நடத்தினார்கள்.

அதில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய தெரிய வந்துள்ளது.

ஆனாலும் அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நன்றாக உணவு சாப்பிடுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் .

அத்தோடு ஆப்பிரிக்க வகை சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாமே சந்தேகித்து அதற்கும் பரிசோதனை நடாத்தி வருகிறார்கள்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...