a8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏ–9 வீதியில் விபத்து – துண்டாடப்பட்டது முதியவரின் கால்

Share

கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி ஏ–9 வீதியிலுள்ள தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த (வயது–75 ) முதியவர் ஒருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இதில் முதியவரின் கால் துண்டாடப்பட்டதுடன் தலைப் பகுதியிலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

79

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...