Landslide in Nepal scaled
செய்திகள்உலகம்

நேபாளத்தில் நிலச்சரிவு – சாவடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நேபாளத்தில் பருவ மழை காலம் முடிந்த பின்னரும் அங்கு மழை தொடர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் பருவ மழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு சாவடைந்தோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 41 பேரை காணவில்லை.

அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் 2,232 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் 49 வீடுகள், 6 பாலங்கள் மற்றும் 3 அரசு அலுவலகங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...