pearl one news Kanapathipillai Mahesan
செய்திகள்இலங்கை

யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

Share

யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன், இறப்புகளும் அதிகரித்து செல்கின்றன.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படும்.

இதேவேளை, மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப் பயிற்சி என்பவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பொதுமக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

ஏற்கெனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவசரப்படாது அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்’ – என மாவட்டச் செயலாளர் கூறினார்.

 

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...