upul rohana
செய்திகள்இலங்கை

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

Share

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் தற்போது அதிகரித்துச் செல்கிறது. இதனால் தொற்றாளர்களால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பியுள்ளன.

தற்போது நாட்டில் கொரோனாத் தொற்றால் அதிகமானோர் இறக்கின்றனர். இதற்கு டெல்ரா பரவல் அதிகரித்துள்ளமையே காரணமாகும். தொற்றுக்குள்ளாவோரின் தொகை குறைக்கப்பட வேண்டுமெனில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை 150ஐ தாண்டும். அதேபோல தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு விரைவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கினால் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும். தற்போது எம்முன் வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா என்கிற இரு சவால்களே உள்ளன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...