செய்திகள்இலங்கை

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

upul rohana
Share

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் தற்போது அதிகரித்துச் செல்கிறது. இதனால் தொற்றாளர்களால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பியுள்ளன.

தற்போது நாட்டில் கொரோனாத் தொற்றால் அதிகமானோர் இறக்கின்றனர். இதற்கு டெல்ரா பரவல் அதிகரித்துள்ளமையே காரணமாகும். தொற்றுக்குள்ளாவோரின் தொகை குறைக்கப்பட வேண்டுமெனில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை 150ஐ தாண்டும். அதேபோல தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு விரைவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கினால் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும். தற்போது எம்முன் வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா என்கிற இரு சவால்களே உள்ளன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...