2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அதிரடி கைது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுப் படையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அதேபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததால், அதிரடி சோதனை நடத்தப்பட்டபோது பசாய் தாராப்பூர் பகுதியில், கிடங்கு ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அதிகாரிகள் விசாரித்தனர்.
அவர்கள் போதைப்பொருளை சத்துமாவில் கலந்து கடத்த முயன்றுள்ளனர். உடனே அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், ஜாபர் சாதிக் திரையுலக பிரமுகர்கள், பிரபல நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.
- abc news
- bbc news
- breaking news
- christian world news
- daily news
- delhi
- dw news
- latest tamil cinema news
- latest tamil news
- live news
- live news in tamil
- morning news
- my world
- nbc news
- News
- News today
- tamil latest news Tamil Producers
- tamil live news
- tamil news live
- Tamil news online
- tamil news today
- today morning news
- today news tamil
- today tamil news
- trending news
- trending world news
- us news
- woke news
- World
- world news
- world news live
- world news tonight
Comments are closed.