tamilni 184 scaled
செய்திகள்

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அதிரடி கைது

Share

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அதிரடி கைது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுப் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அதேபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததால், அதிரடி சோதனை நடத்தப்பட்டபோது பசாய் தாராப்பூர் பகுதியில், கிடங்கு ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்கள் போதைப்பொருளை சத்துமாவில் கலந்து கடத்த முயன்றுள்ளனர். உடனே அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், ஜாபர் சாதிக் திரையுலக பிரமுகர்கள், பிரபல நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...