images 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வென்னப்புவவில் துயரம்: காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்த 17 வயது சிறுமி மாயம்!

Share

வென்னப்புவ, நைனமடம பாலத்திலிருந்து ஜின் ஓயா ஆற்றில் குதித்த 17 வயது சிறுமியைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜா-எல, போபிட்டிய பகுதியைச் சேர்ந்த உமயங்கனா சத்சரணி (17) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று (28) மாலை 5.30 மணியளவில் சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள நைனமடம பாலத்திற்கு அருகில் இளைஞன் ஒருவனுடன் இச்சிறுமி பேசிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து, சிறுமி திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

சிறுமியைக் காப்பாற்றுவதற்காக அவருடன் இருந்த 18 வயது இளைஞனும் ஆற்றில் குதித்துள்ளார். அருகிலிருந்த ஹோட்டல் ஊழியர்கள் கயிற்றை வீசி அந்த இளைஞனை மீட்டுள்ளனர். எனினும், சிறுமி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

மீட்கப்பட்ட இளைஞன் (நைனமடம பகுதியைச் சேர்ந்த ருமேஷ் லக்ஷன்) காயமடைந்த நிலையில் மாரவில அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமியின் உடலைத் தேடும் பணியில் நேற்று உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்ட போதிலும் பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று (29) காலை முதல் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...