ஜேர்மனி பிரதமராக ஒலாப் ஸோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு கடந்த 16 ஆண்டு காலம் பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி நேற்றுடன் (08) நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.
இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஜேர்மனியின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று (08) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் துணை பிரதமருமான ஒலாப் ஸோல்ஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதுடன் அவர் பதவியும் ஏற்றுள்ளார்.
#WorldNews
Leave a comment