prison
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறையில் அதிரடிச் சோதனை: முன்னாள் எம்.பி.க்கள் இருந்த வார்டில் 16 தொலைபேசிகள் மீட்பு – சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!

Share

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த 16 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘K’ வார்டில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் இந்தத் திடீர் சோதனையை முன்னெடுத்தனர். கைதிகளின் அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கையடக்கத் தொலைபேசிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வார்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் சுமார் 150 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் மூலம் கைதிகள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் மற்றும் எவ்வாறான உரையாடல்களை மேற்கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காக, அவை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பூசா சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் பதற்றமான சூழல் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...