26 6980895903656
செய்திகள்இலங்கைபிராந்தியம்

12 ஆண்டுகால நீதிப் போராட்டம்: புதுக்குடியிருப்பு இளைஞன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – குரவில் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் இன்று (02) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 11-ஆம் திகதி.உடையார்கட்டு குரவில் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது, அதே இடத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் (19 வயது) என்பவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தார். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான வழக்கு, ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று பகல் 12 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

மரண தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன.அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌனம் காக்க, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...