26 6980895903656
செய்திகள்இலங்கைபிராந்தியம்

12 ஆண்டுகால நீதிப் போராட்டம்: புதுக்குடியிருப்பு இளைஞன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – குரவில் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் இன்று (02) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 11-ஆம் திகதி.உடையார்கட்டு குரவில் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது, அதே இடத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் (19 வயது) என்பவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தார். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான வழக்கு, ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று பகல் 12 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

மரண தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன.அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌனம் காக்க, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...