24116474 fisherman
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்குக் கடலில் கைதான 11 மீனவர்கள் திக்கோவிட்டவுக்கு அழைத்து வரப்பட்டனர்! தெஹிபாலவின் பின்னணி குறித்து சந்தேகம்!

Share

தெற்குக் கடற்பரப்பில் வைத்து சுமார் 270 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகளும், அதில் இருந்த 11 சந்தேகநபர்களும் இன்று (25) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கடற்படையினர் முன்னெடுத்த முதற்கட்ட சோதனையில், சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் ஒரு படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதே கடற்பரப்பில் தொடர்ந்த சோதனையில், மற்றுமொரு பலநாள் மீன்பிடிப் படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு செய்மதித் தொலைபேசிகளும் (Satellite Phones) கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இரண்டு படகுகளிலிருந்தும் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ (Ice) ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இந்த பாரிய போதைப்பொருள் தொகையை, வெளிநாட்டிலிருந்து ‘தெஹிபால’ எனப்படும் கடத்தல்காரரே நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சர்வதேச புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...