Schools
செய்திகள்இலங்கைபிராந்தியம்

10 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர் இல்லை: மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அவலநிலை அம்பலம்!

Share

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த பத்து வருடங்களாக வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் எவரும் நியமிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. அதே பிராந்தியத்தில் உள்ள ஏனைய சில பாடசாலைகளுக்கு வரலாற்றுப் பாடத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாடசாலை மட்டும் கடந்த தசாப்த காலமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இது குறித்துக் கடும் அதிருப்தி வெளியிட்ட பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ பவானந்தராஜா, மாகாண கல்விப் பணிப்பாளரிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் இந்த நீண்டகால ஆசிரியர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...