Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த முக்கியமான பொருட்கள் யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் (அக் 30) குறித்த பகுதியைச் சுத்தம் செய்த வேளையிலேயே இந்தப் பொருட்கள் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கோப்பாய் காவல்துறையினருக்கு இது குறித்துத் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, நேற்று இரவு முதல் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று (நவ 01) காலை, காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்கப்பட்ட இரண்டு மகசின்கள் மற்றும் வயர்களையும் பத்திரமாக மீட்டுச் சென்று கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...