Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த முக்கியமான பொருட்கள் யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் (அக் 30) குறித்த பகுதியைச் சுத்தம் செய்த வேளையிலேயே இந்தப் பொருட்கள் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கோப்பாய் காவல்துறையினருக்கு இது குறித்துத் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, நேற்று இரவு முதல் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று (நவ 01) காலை, காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்கப்பட்ட இரண்டு மகசின்கள் மற்றும் வயர்களையும் பத்திரமாக மீட்டுச் சென்று கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...