India 2
செய்திகள்இந்தியா

விமான நிலையங்களில் தீவிர சோதனை!

Share

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 21 பேருக்கு இதுவரை ஒமிக்ரோன் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒமிக்ரோன் உறுதியானவர்களில் 4 பேர் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனாத் தொற்று பாதிப்பு சுமார் 38 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த நிலையில், ஒமிக்ரோன் பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதனையடுத்து தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரோன் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்தமாக இந்தியாவில் 20 இற்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் நகரில் 100 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 4 பேரும் கடந்த மாதம் 25ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனர் என்றும் கடந்த 29ஆம் திகதி, ஜெய்ப்பூரில் நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துகொண்டதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...