rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Share

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு எதிரான விசாரணைகளை ஜூலை மாதம் மீண்டும் முன்னெடுக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன மீன்பிடி அமைச்சராக இருந்தபோது, கொரிய நிறுவனமொன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்குப் பதியப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித சேனாரத்னவுக்கு, கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கக் கால அவகாசம் கோரினர்.

அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் திகதியிட்டார். அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...