anil jasinghe
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விரைவில் தேசிய மருத்துவமனையாக தரம் உயர்வு: சுகாதார அமைச்சு அறிவிப்பு

Share

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைத் (Jaffna Teaching Hospital) தேசிய மருத்துவமனையாக (National Hospital) தரம் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனச் சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு, மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த நிறுவன மதிப்பாய்வு (Institutional Review) முன்னெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினர்:

தற்போது வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் நவீனப்படுத்த வேண்டியதன் அவசியம். அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளமை.

வட மாகாணத்தின் பிரதான மருத்துவ மையமாக விளங்கும் இதனைத் தேசிய மருத்துவமனையாகத் தரம் உயர்த்தினால், அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் வசதிகளைப் பெற முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க “தேசிய மருத்துவமனை நிலையை அடைவதற்குத் தேவையான குறிப்பிட்ட அளவுகோல்கள் (Criteria) உள்ளன. அந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைத் தேசிய மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.”

தற்போது கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் மட்டுமே தேசிய மருத்துவமனைகள் உள்ள நிலையில், யாழ்ப்பாணம் இந்த அந்தஸ்தைப் பெறுவது வட பகுதி சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

 

 

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...