articles2F9mH80UwR7KpXCbAa6Bk9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான ரீச்மீ கல்வி கண்காட்சி: தை 30, 31 திகதிகளில் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Share

ரீச்மீ (ReachMe) நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியான பாரிய கல்விக் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி (தை) 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா இது குறித்த விபரங்களை வெளியிட்டார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள், புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

சதுரங்கப் போட்டி, நடனப் போட்டி, மற்றும் பாடல் போட்டிகள் என மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திரைப்படத் துறை தொடர்பான பயிற்சிகள் மற்றும் சுவையான உணவுத் திருவிழா (Food Fest) ஆகியவையும் இதில் இடம்பெறும். யாழ்ப்பாணத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர்செய்து, அதனை மீண்டும் ஒரு கல்வி மையமாகக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். கல்வியைச் சுவாரஸ்யமான முறையில் எப்படிக் கற்கலாம் என்பதை இந்த கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு உணர்த்தவுள்ளோம்,என அஞ்சலிகா தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையவுள்ள இந்தக் கண்காட்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...