26 6978ad208a2f3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சோகம்: குளவி கொட்டியதில் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு; 3 மாணவர்கள் காயம்!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற குளவி கொட்டுச் சம்பவத்தில், துணுக்காய் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

துணுக்காய் கல்வி வலயத்தில் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த அன்ரனி ஜோர்ஜ் என்பவரே உயிரிழந்த அரச உத்தியோகத்தராவார்.

மாங்குளம் பழைய கொலனி பகுதியில் வீதியோரம் இருந்த குளவி கூடு ஒன்று திடீரென கலைந்து, அந்த வீதியால் சென்றவர்களைத் தாக்கியுள்ளது.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கடும் பாதிப்புக்குள்ளான உதவிக் கல்விப் பணிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மூன்று மாணவர்களுக்கும் மாங்குளம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குளவி கூடு கலைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அப்பகுதியில் உள்ள ஏனைய குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...