Screenshot 20251211 014558 Facebook
செய்திகள்இலங்கை

முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து வங்கி அட்டைத் திருட்டு: பொலன்னறுவை நபர் களுத்துறையில் கைது!

Share

வங்கி ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த 42 வயதுடைய நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி தெற்கு களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அரச வங்கி ஒன்றில் கடமையில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரைச் சோதனையிட்டதில் இந்த மோசடி அம்பலமானது.

சந்தேக நபரிடமிருந்து அவருக்குச் சொந்தமில்லாத 11 வங்கி அட்டைகள் மற்றும் வேறொரு நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.பொலன்னறுவையைச் சேர்ந்த இவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

வங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்களைக் குறிவைக்கும் இந்நாபர், அவர்களுக்கு உதவுவது போல் நடித்து இரகசியக் குறியீட்டை (PIN) அறிந்துகொள்வார். பின்னர், கைதேர்ந்த முறையில் அவர்களின் அட்டையைத் திருடிவிட்டு, வேறு ஒரு போலியான அட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டுத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறும், எக்காரணம் கொண்டும் உங்களது இரகசிய இலக்கத்தை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...