மஹரகமவில் பரபரப்பு: காவல்துறை கான்ஸ்டபிளைத் தாக்கிய மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் மகன் கைது!

Makadure Madush 1200px 24 11 07

கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் அவரது 21 வயதுடைய மகன் உட்பட ஐந்து சந்தேக நபர்களை மஹரகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு காவல்துறை கான்ஸ்டபிளைக் கடத்திச் சென்று, கடுமையாகத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் பாதிக்கப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள், மாகந்துரே மதுஷின் மனைவியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மதுஷின் மனைவியின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இவர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இதன்போது மதுஷின் மனைவி, அவரது மகன் மற்றும் அங்கிருந்த நண்பர்கள் இணைந்து கான்ஸ்டபிளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான கான்ஸ்டபிள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் மஹரகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினர், சட்டத்தை நிலைநாட்டும் ஒரு காவல்துறை அதிகாரி மீதே தாக்குதல் நடத்தியிருப்பது பாதுகாப்புத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version