image 1345fe3a72
செய்திகள்அரசியல்இலங்கை

போர் வெற்றியைப் பேச ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இல்லை- நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆவேசம்!

Share

78-ஆவது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் போர் வெற்றிகள் குறித்துக் குறிப்பிடத் தவறியதைச் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாகச் சாடியுள்ளார்.

நாமலின் உரையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் சுதந்திர தினங்களில் உலகப்போர் வெற்றிகள் மற்றும் இராணுவப் பிரிவுகளின் சாதனைகளைப் பெருமையுடன் நினைவுகூர்கின்றன. ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘டித்வா’ சூறாவளிப் பணிகளைப் பற்றிப் பேசினாரே தவிர, பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவத்தின் உண்மையான வெற்றியைப் பேசத் தயங்குகிறார்.

நாங்கள் தமிழ் மக்களுடன் போர் புரியவில்லை, பயங்கரவாதத்துடனேயே போர் புரிந்தோம். இந்த உண்மையைச் சுதந்திர தினத்தன்று உரக்கச் சொல்ல நாட்டுத் தலைவருக்கு ‘முதுகெலும்பு’ இருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர்கள் பகிரங்கமாக மதத் தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல். குறிப்பாகத் திருகோணமலை போன்ற பகுதிகளில் மதத் தலைவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகுந்த கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நலனை விட ராஜபக்ஷக்கள் மீதான அரசியல் பழிவாங்கல்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. அதற்காகவே புதிய சட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கிறது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

சுதந்திர தினத்தன்று நாட்டின் ஒரு பகுதியில் கறுப்புக் கொடி ஏற்றி ஹர்த்தால் நடத்தப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளாமல் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஒரு தரப்பினருக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் வழங்கிவிட்டு மற்றவர்களை ஒடுக்குவது உண்மையான ஜனநாயகம் அல்ல என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...