1755448610 1715924733 dddsww
செய்திகள்அரசியல்இலங்கை

பெப்ரவரி 4 கரி நாள்: பொது அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

Share

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை ‘கரி நாள்’ ஆகப் பிரகடனப்படுத்தி, வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பொது அமைப்புகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணி அபகரிப்பு மற்றும் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த எதிர்ப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் போராட்டமாக மாற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தின் முக்கிய சிவில் அமைப்புகள் மற்றும் ஆளுமைகளுடன் மாணவர்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவி திருமதி இளங்கோதை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர். மு. கோமகன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்: . உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துத் தமது போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள சூழலில், வடக்கு – கிழக்குத் தழுவிய ரீதியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும், என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சந்திப்புகளின் மூலம் போராட்டத்திற்கான ஒருமித்த ஆதரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...