MediaFile 4
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி – எப்ஸ்டீன் வதந்தி: குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல இந்திய வெளியுறவுத்துறை கடும் சாடல்!

Share

அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்துக் கூறியதாவது:

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அந்த ஆவணம் போலியானது. எப்ஸ்டீன் வழக்கில் வெளியிடப்பட்ட 3 மில்லியன் பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் பிரதமரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறித்த வதந்திகள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் குப்பையான மற்றும் ஆதாரமற்ற உளறல்கள்” (Trashy ruminations of a convicted criminal) என்று அவர் வர்ணித்தார்.

சில சமூக விரோதிகள் திட்டமிட்ட முறையில் பிரதமர் மோடியின் பெயரை இழிவுபடுத்த இத்தகைய போலியான பட்டியல்களைப் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் சமீபத்தில் ஜெப்ரி எப்ஸ்டீனின் வழக்கோடு தொடர்புடைய பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்ட சிலர், வேண்டுமென்றே பிரதமரின் பெயரை அதில் இணைத்துப் போலியான பட்டியலை உருவாக்கிப் பரப்பியமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்திய அரசு இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக அணுகுவதோடு, இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...