அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்துக் கூறியதாவது:
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அந்த ஆவணம் போலியானது. எப்ஸ்டீன் வழக்கில் வெளியிடப்பட்ட 3 மில்லியன் பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் பிரதமரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
குறித்த வதந்திகள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் குப்பையான மற்றும் ஆதாரமற்ற உளறல்கள்” (Trashy ruminations of a convicted criminal) என்று அவர் வர்ணித்தார்.
சில சமூக விரோதிகள் திட்டமிட்ட முறையில் பிரதமர் மோடியின் பெயரை இழிவுபடுத்த இத்தகைய போலியான பட்டியல்களைப் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் சமீபத்தில் ஜெப்ரி எப்ஸ்டீனின் வழக்கோடு தொடர்புடைய பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்ட சிலர், வேண்டுமென்றே பிரதமரின் பெயரை அதில் இணைத்துப் போலியான பட்டியலை உருவாக்கிப் பரப்பியமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்திய அரசு இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக அணுகுவதோடு, இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.