நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!
செய்திகள்இலங்கை

நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!

Share

நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!

அத்தியாவசியப் பொருள்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு  ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விற்பனை விலை தொடர்பில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனை செய்ய முடியாது.

அவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டம் 2 ஆயிரத்து 500 ரூபா என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணம் குறைவாக உள்ள காரணத்தால் குற்றங்கள் அதிகவிலும், சாதாரணமாகவும் இடம் பெறுகின்றன.

எனவே தண்டப்பணத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...