நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!!

IMG 20210817 WA0013

நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!!

நியூசிலாந்தில் நேற்று முதல் நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று  நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி நியூஸிலாந்து முழுவதும் நாளை புதன்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர் சென்றுவந்த கடலோர நகரம் ஏழு நாட்களுக்கு முடக்கப்படும் என்றும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

4 ஆம் நிலையில் கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் சுமார் 2,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

Exit mobile version