thumb large Namal Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான பண மோசடி வழக்கு: விசாரணை ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Share

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை மாதம் நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கிற்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் (Legal Advice) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனச் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

சிஐடியினரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அடுத்த தவணைக்குள் சட்ட ஆலோசனையின் தற்போதைய நிலை குறித்துத் தெளிவான அறிக்கையை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய பண மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய வழக்காகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...