covid 1
செய்திகள்இலங்கை

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

Share

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய வலியுறுத்தியுள்ளார்.

விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து நாட்டை முடக்கினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புஞ்சிபொரளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இன்னமும் எத்தனை சடலங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை பற்றிய பொய்யான தகவல்களை வழங்கி, புள்ளிவிவரங்களில் மோசடி செய்யும் அரசாங்கம், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெய்யான கரிசை காட்டுமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...