covid 1
செய்திகள்இலங்கை

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

Share

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய வலியுறுத்தியுள்ளார்.

விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து நாட்டை முடக்கினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புஞ்சிபொரளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இன்னமும் எத்தனை சடலங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை பற்றிய பொய்யான தகவல்களை வழங்கி, புள்ளிவிவரங்களில் மோசடி செய்யும் அரசாங்கம், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெய்யான கரிசை காட்டுமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...