covid 1
செய்திகள்இலங்கை

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

Share

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய வலியுறுத்தியுள்ளார்.

விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து நாட்டை முடக்கினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புஞ்சிபொரளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இன்னமும் எத்தனை சடலங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை பற்றிய பொய்யான தகவல்களை வழங்கி, புள்ளிவிவரங்களில் மோசடி செய்யும் அரசாங்கம், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெய்யான கரிசை காட்டுமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...