upul rohana
செய்திகள்இலங்கை

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

Share

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் தற்போது அதிகரித்துச் செல்கிறது. இதனால் தொற்றாளர்களால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பியுள்ளன.

தற்போது நாட்டில் கொரோனாத் தொற்றால் அதிகமானோர் இறக்கின்றனர். இதற்கு டெல்ரா பரவல் அதிகரித்துள்ளமையே காரணமாகும். தொற்றுக்குள்ளாவோரின் தொகை குறைக்கப்பட வேண்டுமெனில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை 150ஐ தாண்டும். அதேபோல தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு விரைவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கினால் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும். தற்போது எம்முன் வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா என்கிற இரு சவால்களே உள்ளன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...